ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி முறையீடு : பிற்பகல் 1 மணிக்கு விசாரணை

ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டுள்ளது
ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி முறையீடு : பிற்பகல் 1 மணிக்கு விசாரணை
Published on

சென்னை,

புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்தவேண்டும். 21 மாத நிலுவை தொகையை வழங்கவேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும். அரசு பள்ளிகளை மூடக்கூடாது என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 4-ந்தேதி (நாளை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.

இந்த நிலையில், டிசம்பர் 10 ஆம் தேதி அரையாண்டுத்தேர்வு துவங்க உள்ள நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது. இந்த முறையீட்டை ஏற்று பிற்பகல் 1 மணிக்கு விசாரிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. ஆனால், அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. போராட்டத்தை எவ்வாறு கையாள்வது என்பது அரசுக்கு தெரியும் எனவும், மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்து விட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com