கொக்கராயன்பேட்டை காவிரி ஆற்றில்தனியார் நிறுவன ஊழியர் உடல் மீட்பு

கொக்கராயன்பேட்டை காவிரி ஆற்றில் ஈரோட்டை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் உடலை போலீசார் மீட்டனர்.
கொக்கராயன்பேட்டை காவிரி ஆற்றில்தனியார் நிறுவன ஊழியர் உடல் மீட்பு
Published on

பள்ளிபாளையம்

ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்தவர் சையத் முஸ்தபா (வயது 60). இவரது 2-வது மகன் சையத்முஸ்தாக் அலி (32). திருமணமாகிவிட்டது. இவர் ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த மாதம் 25-ந் தேதி வெளியே செல்வதாக தந்தையிடம் கூறிவிட்டு சென்றார். இந்தநிலையில் 4 நாட்களாக சையத்முஸ்தாக் அலி வீடு திரும்பாததால், அவரது தந்தை சையத் முஸ்தபா ஈரோடு தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மதியம் பள்ளிபாளையம் அடுத்த கொக்கராயன்பேட்டை அருகே காவிரி ஆற்றின் கரையோரம் ஒரு ஆண் இறந்து கிடந்தார். அதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் மொளசி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மொளசி சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், ஏட்டு கனகராஜ் ஆகியோர் அந்த ஆணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் அவர், ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்த சையத்முஸ்தாக் அலி என்பது தெரியவந்தது. இதுகுறித்து மொளசி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சையத்முஸ்தாக் அலி எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com