குவிந்து கிடக்கும் குப்பைகள்

குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
Published on

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் கிராமத்தில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியின் அருகே அப்பகுதியில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மலைப்போல் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com