

சென்னை,
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
சென்னையில் 25.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
போரூர்: குமணன்சாவடி பெரியார் நகர், எஸ்.வி.நகர், கண்ணகி நகர்,பவித்ரா நகர்,சுகுந்தலா நகர், ஜீவன் பிரகாஷ் நகர், விஜிஎன் நகர், சாந்தி நகர், அட்கோ நகர்.
தாம்பரம்: எம்.ஆர்.எம். தெரு, ராஜாஜி சாலை, வெங்கடேசன் தெரு, சண்முகம் சாலை, சிவசண்முகம் தெரு, அப்துல் ரஸாக் தெரு, போலீஸ் குடியிருப்புகள், ஜி.எஸ்.டி. சாலை, துரைசாமி ரெட்டி தெரு, எம்.கே. ரெட்டி தெரு, பக்தவத்சலம் தெரு.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.