சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னை
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னையில் நாளை (05.06.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
கொரட்டூர்: ரெட்டி தெரு , பாரதி நகர், ரயில் நிலைய சாலை, திருமுல்லைவாயல் சாலை , மாணிக்கம் பிள்ளை தெரு , மேனாம்பேடு சாலை முதல் எம்.டி.எச் சாலை வரை.
ரெட்ஹில்ஸ்: சோத்துப்பெரும்பேடு ஒரு பகுதி, காரனோடை முழுவதும், முனிவேல் நகர், ஆத்தூர், தேவனேரி, பஸ்தாபாளையம் மற்றும் விஜிபி மேடு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






