சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னை,
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னையில் நாளை (25.11.2025) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
கும்மிடிப்பூண்டி: மாதர்பாக்கம், பாதிரிவேடு, நெல்லூர், என்.எஸ்.நகர், நேமல்லூர், ரோசா நகர், செதில்குப்பம், பல்லவாடா, கண்ணம்பாக்கம், அல்லிபூக்குளம், ராமச்சந்திராபுரம், போந்தவாக்கம், சூரப்பூண்டி, எக்குவாரபாளையம், சித்தூர்நத்தம், காரம்பேடு, மேல்பாக்கம், பொம்மச்சிக்குளம், பண்ணூர், கண்டிகை, நாகராஜ் கண்டிகை, கே.என்.பேட்டை, கொங்கல்.
எழும்பூர் : எழும்பூர் நெடுஞ்சாலை, கெங்கு ரெட்டி தெரு, வீராசாமி தெரு, பெருமாள் ரெட்டி தெரு, கியுப் சாலை, ஜகதம்மாள் கோவில் தெரு, எம்.எஸ் நகர், சேத்துப்பட்டு, பாந்தியன் சாலை, மாண்டியத் சாலை, எத்திராஜ் சாலை, மார்ஷல் சாலை, மோதிலால் சந்து, பழைய காவல் ஆணையர் அலுவலகம், நீதிபதிகள் குடியிருப்பு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






