பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று நிறைவு: பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைகிறது.
பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று நிறைவு: பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு
Published on

சென்னை,

தமிழகத்தில் மாணவ, மாணவியர்களுக்கான பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வுகள், கடந்த 3-ந்தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைகிறது. தேர்வு முடிவுகள், மே மாதம் 5-ந்தேதி வெளியாக உள்ளன.

முன்னதாக பள்ளிக்கல்வி வாழ்க்கையின் இறுதியான பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நிறைவடைந்த மகிழ்ச்சியை, பள்ளி மாணவ, மாணவியர்கள் சக மாணவ, மாணவியர்களுடன் உற்சாகமாக கொண்டாடி மகிழ்வர். குறிப்பாக, வண்ண கலர்களை பூசிக்கொண்டும், பேனா மை தெளித்து விளையாடியும் மகிழ்வர். சில நேரங்களில், மாணவர்கள் விதிமுறையை மீறிய செயல்களிலும் ஈடுபடுவர்.

இந்நிலையில் பொதுத்தேர்வு முடிந்த நாளன்று, மாணவ, மாணவியர்கள் அமைதியாக பள்ளி வளாகத்தை விட்டு செல்ல வளாகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உள்ளூர் காவல் நிலையங்கள் மூலம் போலீசாரை பாதுகாப்பு பணிக்கு அமர்த்திட தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com