பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

நாகர்கோவிலில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பிளஸ்-2 மாணவி

நாகர்கோவில் ஊட்டுவாழ்மடத்தை சேர்ந்தவர் கனகபாஸ். இவருடைய மகள் மெர்சி (வயது 16). இவர் ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவருக்கு சிறு வயதில் இருந்து கண் பார்வை குறைபாடு இருந்தது. இதையடுத்து கடந்த சில மாதங்களாக மெர்சி மன வருத்தத்தில் இருந்துள்ளார். அவரை உறவினர்கள் தேற்றி வந்தனர்.

இந்த நிலையில் மெர்சி சம்பவத்தன்று வீட்டில் உள்ள குளியலறையில் தூக்கில் தொங்கினார். சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள் அவரை மீட்டு ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பரிதாப சாவு

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மெர்சி நேற்று பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மெர்சி பார்வை குறைபாடு காரணமாக ஏற்பட்ட மன வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணம் ஏதாவது உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com