பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

வயிறு வலி காரணமாக பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

நெகமம், 

நெகமம் அண்ணா நகரை சேர்ந்தவர் மாயக்கிருஷ்ணன். இவரது மகள் தன்யாவர்ஷினி (வயது 17) பிளஸ்-2 படித்து வருகிறார். இவருக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்பட்டு வந்தது. இதற்காக அவர் பல்வேறு இடங்களில் தீவிர சிகிச்சை பெற்று வந்து உள்ளார். இருப்பினும், எங்கு பார்த்தும் வயிறு வலி குணமாகாமல் இருந்தது. இதனால் தன்யாவர்ஷினி விரக்தியில் இருந்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் வயிற்று வலியால் அவதிபட்டு வந்து உள்ளார். நேற்று முன்தினம் தன்யாவர்ஷினியின் தந்தை, தாய் 2 பேரும் கோவை துடியலூரில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன்யாவர்ஷினி துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம்பக்கத்தினர் அவர் வீட்டிற்குள் சென்று வெகுநேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்து கதவை தட்டினர். அதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. உடனே அவர்கள் தன்யாவர்ஷினியின் தந்தைக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். அவர்கள் நெகமம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்து போது, வீட்டில் தன்யாவர்ஷினி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். பின்னர் போலீசார் மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com