குன்றத்தூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பிளஸ்-2 மாணவர் பலி

குன்றத்தூர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி பிளஸ்-2 மாணவா பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
குன்றத்தூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பிளஸ்-2 மாணவர் பலி
Published on

பிளஸ்-2 மாணவர்

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம், கீவளூர் பகுதியை சேர்ந்தவர் இருசப்பன். இவருடைய மகன் சஞ்சய் (வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர், தன்னுடைய நண்பரான நேதாஜி (17) என்பவருடன் நேற்று மாலை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் உள்ள தங்களது உறவினர் வீட்டுக்கு மொபட்டில் சென்றார்.

குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் காலடிபேட்டை அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரியின் மீது இவர்களது மொபட் மோதியது. இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

லாரி சக்கரத்தில் சிக்கி பலி

சாலையில் விழுந்த சஞ்சய் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய சஞ்சய் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த நேதாஜி, குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com