கடலூரில் பிளஸ்-2 மாணவி மாயம்

கடலூரில் பிளஸ்-2 மாணவி மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூரில் பிளஸ்-2 மாணவி மாயம்
Published on

கடலூர் இருசப்பன் தெருவை சேர்ந்தவர் 17 வயது பிளஸ்-2 மாணவி. இவர் நேற்று முன்தினம் அரசு பொதுத்தேர்வை எழுதி விட்டு வீட்டுக்கு வந்திருந்தார். இரவு வீட்டில் தூங்கிய மாணவி திடீரென காணாமல் போனார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது தாய் கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com