முன்கூட்டியே வெளியாகிறது 'பிளஸ் 2' பொதுத்தேர்வு முடிவுகள்


முன்கூட்டியே வெளியாகிறது  பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்
x
தினத்தந்தி 6 May 2025 5:28 AM (Updated: 6 May 2025 6:10 AM)
t-max-icont-min-icon

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி பிளஸ்-2 பொதுத் தேர்வு தொடங்கியது. 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18,344 தனித் தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் பிளஸ்-2 தேர்வை எழுதினார்கள். இந்த தேர்வுகளள் அனைத்தும் மார்ச் 25-ந் தேதி நிறைவடைந்தது. உடனடியாக, விடைத்தாள் திருத்தும் பணிகளும் மாவட்ட தலைநகரங்களில் தொடங்கி நடைபெற்றது. இந்தப் பணிகள் முடிந்த நிலையில், மதிப்பெண்கள் கணினியில் பதிவேற்றும் பணி நடைபெற்றது.

தற்போது இந்தப் பணிகளும் நிறைவடைந்துள்ளன. ஏற்கனவே, பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் மே மாதம் 9-ந் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஒரு நாள் முன்னதாக மே மாதம் 8-ந் தேதி (நாளை மறுநாள்) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்ப பதிவு நாளை (7-ந்தேதி) தொடங்க இருக்கும் நிலையில், பிளஸ்-2 தேர்வு முடிவு ஒருநாள் முன்னதாக வருவது மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக இருக்கும். இதேபோல், பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு இம்மாதம் 19-ந் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதிலும் மாற்றம் ஏற்படும் என்று தெரிகிறது.

1 More update

Next Story