

சென்னை,
சென்னையில் நாளை பா.ம.க இளைஞரணி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பா.ம.க. செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான க.பாலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி பொதுக்குழுக் கூட்டம் நாளை (பிப்ரவரி 10-ந்தேதி) செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.