ரெயிலில் அடிபட்டு புள்ளிமான் சாவு

திருமங்கலம் அருகே ரெயிலில் அடிபட்டு புள்ளிமான் இறந்தது.
ரெயிலில் அடிபட்டு புள்ளிமான் சாவு
Published on

திருமங்கலம், 

திருமங்கலம் அருகில் உள்ள சிவரக்கோட்டை பகுதியில் நேற்று அதிகாலை 5 வயது ஆண் புள்ளிமான் அப்பகுதியில் இருந்த ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது சென்னையிலிருந்து விருதுநகர் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் ஆண் மான் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியானது. இதனை கண்ட அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில்வே ஊழியர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்து இறந்த மானை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்து அதே இடத்தில் புதைத்து சென்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com