தமிழகம் முழுவதும் போலீஸ் உஷார் சுதந்திர தின விழாவுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்

பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக சுதந்திர தின விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் போலீஸ் உஷார் சுதந்திர தின விழாவுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்
Published on

சென்னை,

சுதந்திர தின விழா நடைபெறும் சென்னை கோட்டையை சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. வருகிற 15-ந்தேதி அன்று சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

சுதந்திர தின விழாவில் பயங்கரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபடக்கூடும் என்ற அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை செய்தி அனுப்பியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com