தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணி: எஸ்.பி. ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணி: எஸ்.பி. ஆய்வு
Published on

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் உத்தரவின் படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல் துறையினரின் பணிகளை மாவட்ட எஸ்.பி. மதன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்து, சந்தேகத்திற்கிடமாக வரும் நபர்களை சோதனை செய்தும், குற்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் பொருட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com