காவலர் தேர்வு: தமிழ் தேர்வில் தேர்ச்சி கட்டாயம்..!

காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழில் தேர்ச்சி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காவலர் தேர்வு: தமிழ் தேர்வில் தேர்ச்சி கட்டாயம்..!
Published on

சென்னை,

காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ் தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காவலர் மற்றும் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மாற்றம் கொண்டு வந்துள்ளது.

அதன்படி தமிழ் தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும்.

தமிழ் தேர்வில் தேர்ச்சி பெறுவோரின் ஓ.எம்.ஆர். விடைத்தாள் மட்டுமே திருத்தப்படும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com