56.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: சுகாதாரத்துறை தகவல்

57 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
56.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: சுகாதாரத்துறை தகவல்
Published on

சென்னை,

போலியோ சொட்டு மருந்து முகாம் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என 43 ஆயிரத்து 51 மையங்களில் முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்த மையங்களில் 57 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டது. 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. சொட்டு மருந்து செலுத்தும் முகாம்களில் ஏராளமான தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட்டுக் கொண்டு சென்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 56.34 லட்சம் குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 57.84 லட்சம் என இலக்கு இருந்த நிலையில், 98.18% குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com