சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மங்கலம்பேட்டையில், அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மங்கலம்பேட்டையில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மங்கலம்பேட்டையில், அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

விருத்தாசலம், 

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஒருங்கிணைப்பில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை தேரடி வீதியில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் இக்பால் தலைமை தாங்கினார். தி.மு.க. நகர செயலாளர் செல்வம், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் வேல்முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநில செயலாளர் அஜீஸ்கான் வரவேற்றார்.

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில துணைத்தலைவர் மெஹராஜ்தீன், வக்கீல் பாரிமுஹம்மது இப்ராஹிம், இந்திய குடியரசு கட்சியின் மாநில இணை பொதுச்செயலாளர் மங்காப்பிள்ளை, நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை பிரிவு மாவட்ட செயலாளர் கதிர்காமன், மங்கலம்பேட்டை பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் தாமோதரன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் அசன் முஹம்மது, வக்கீல் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சமையல் கியாஸ் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து கண்டன உரையாற்றினர். இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மங்கலம்பேட்டை நகர துணைச்செயலாளர் கியாசுதீன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com