பொங்கல் பண்டிகை: ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்

பொங்கல் பண்டிகையையொட்டி, 2024 ஜனவரி 12ம் தேதி பயணம் செய்வோர் இன்று முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை: ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
Published on

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி ,பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும். அந்த வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி 14-ம் தேதி (ஞாயிறு) பேகி பண்டிகை தொடங்கி, ஜனவரி 15-ம் தேதி பெங்கல், 16-ம் தேதி மாட்டுப்பொங்கல் 17-ம் தேதி காணும் பெங்கல் கெண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது. 2024 ஜனவரி 11ம் தேதிக்கான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே நேற்று விற்றுத்தீர்ந்தன. இதனை தொடர்ந்து, ஜனவரி 12ம் தேதி பயணம் செய்வோர் இன்று முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,

* செப்டம்பர் 15-ம் தேதி(நாளை) முன்பதிவு செய்வோர் ஜனவரி 13ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.

* செப்டம்பர் 16-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 14-ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.

* செப்டம்பர் 17-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 15ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.

* செப்டம்பர் 18-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 16ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.

*செப்டம்பர் 19-ம் தேதி முன்பதிவு செய்வோர், ஜனவரி 17ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம். என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com