பொங்கல் பண்டிகை: மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செங்கோடை - போத்தனூர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06097) வருகிற 12ம் தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, காலை 7.40 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்து சேரும்.
மறுமார்க்கத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06098) வருகிற 13 ம் தேதி மேட்டுப்பாளையம் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 4.45 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.
போத்தனூரில் இருந்து செங்கோட்டை செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06115) வருகிற 14ம் தேதி போத்தனூரில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 11.30 மணிக்கு போத்தனூரில் வந்து சேரும்.
மறுமார்க்கத்தில் செங்கோடையில் இருந்து போத்தனூர் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06116) வருகிற 15ம் தேதி செங்கோடையில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் இரவு 7.30 மணிக்கு போத்தனூர் வந்து சேரும்.
இந்த ரெயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







