பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
Published on

சென்னை,

பண்டிகை கால நாட்களில் ரெயில் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பு தொடங்கப்படும். அவ்வாறு டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விடும். அந்தவகையில் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரெயிலில் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

பொதுமக்கள் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வழியாகவோ அல்லது ரெயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களிலோ ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஜனவரி 12-ந்தேதி பயணிக்க இன்று (திங்கட்கிழமை) முன்பதிவு செய்யலாம். ஜனவரி 13-ந்தேதி பயணிக்க நாளை (செவ்வாய்க்கிழமை) முன்பதிவு செய்யலாம், ஜனவரி 14-ந்தேதி பயணம் செய்ய வருகிற 14-ந்தேதி முன்பதிவு செய்யலாம், பொங்கல் தினமான ஜனவரி 15-ந்தேதி பயணம் செய்ய வருகிற 15-ந்தேதி முன்பதிவு செய்யலாம். ஜனவரி 16-ந்தேதி பயணம் செய்ய வருகிற 16-ந்தேதி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com