

சென்னை,
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்தின் போது பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலைக் குறைக்க சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி,
விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண்:06130) நாளை (மார்ச் 3) அன்று காலை 10.10 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் காலை 11.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், திருவண்ணாமலையில் இருந்தி விழுப்புரம் செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06129) நாளை (மார்ச் 3) அன்று பிற்பகல் 12.40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்து சேரும்.