திருச்சி, தில்லைநகர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

திருச்சி, தில்லைநகர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருச்சி, தில்லைநகர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
Published on

திருச்சி,

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் திருச்சி நகரியம் இயக்கலும் பராமரித்தலும் செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி தில்லைநகர் பகுதியில் மாநகராட்சியால் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தில்லைநகர் முதல் கிராஸ், (மேற்கு) 2-வது கிராஸ், 3-வது கிராஸ், சாஸ்திரிரோடு வடகிழக்கு விஸ்தரிப்பு, 1 முதல் 5 கிராஸ் வரை, தேவர்காலனி, சாலைரோடு கிழக்கு(தில்லைநகர் சந்திப்பு முதல் மாரீஸ் மேம்பாலம் வரை)மலைக்கோட்டை காலனி, கரூர் பைபாஸ்ரோடு, அண்ணாமலைநகர் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com