தமிழகத்தில் இரவு நேரங்களில் தொடரும் மின்வெட்டு: பொதுமக்கள் கடும் அவதி

சென்னை தண்டையார்பேட்டையில் தொடர் மின்வெட்டை கண்டித்து மின்வாரிய ஊழியர்களை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் இரவு நேரங்களில் தொடரும் மின்வெட்டு: பொதுமக்கள் கடும் அவதி
Published on

சென்னை,

தமிழகத்​தில் கோடை வெயில் சுட்டெறித்து வருகிறது. அதிகபட்சமாக 108 டிகிரி வரை வெயில் பதிவாகி வருகிறது. பகல் நேரங்களில் சாலைகளில் நடக்க முடியாத அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. கோடை கால வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல வீடுகளில் பேன், ஏசி இல்லாமல் ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியான நிலையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு தமிழகத்தில் ஏற்பட்டு வருகிறது.

இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தங்களுடைய அதிருப்தியை பொதுமக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். நள்​ளிரவு நேரங்​களில் ஏற்​படும் மின்​வெட்டு காரண​மாக குழந்​தைகள், முதி​ய​வர்​கள் மற்​றும் நோயாளி​கள் தூக்​கமின்றி தவித்து வரு​கின்​றனர். மின்​சா​ரம் எப்​போது வரும், எப்​போது போகும் என்று தெரி​யாத நிலை நீடிப்​ப​தால், மறு​நாள் வேலைக்கு செல்​வோர் கடுமை​யான மன உளைச்​சலுக்கு ஆளாகி​யுள்​ளனர்.

சென்னையை மட்டுமன்றி, கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இது தமிழக மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து இந்த மின்தடைக்கு எதிராக மக்கள் குரல் கொடுத்தும் வருகின்றனர்.

மின்​தடை குறித்து மின்​வாரிய அலு​வல​கங்​களைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்க முயன்​றால், முறை​யான பதில்​கள் அதி​காரி​களிடம் இருந்து கிடைப்​ப​தில்லை என்​றும், தொலைபேசி இணைப்​பு​கள் துண்​டிக்​கப்​படு​வ​தாக​வும் மக்​கள் குற்​றம்​ சாட்​டு​கின்​றனர்.

இரண்டு நாட்​களுக்கு முன் சென்​னை​யில் பெரம்​பூர், ராயபுரம் உள்​ளிட்ட பகு​தி​களி​லும் புறநகர் பகு​தி​களான அம்​பத்​தூர், ஆவடி போன்ற பகு​தி​களி​லும் 2 மணி நேரம் வரை மின்​சா​ரம் தடைப்​பட்​டிருந்​தது.

மேலும் நேற்று முன்​தினம் கொளத்​தூர், வில்​லி​வாக்​கம், தண்​டை​யார்​பேட்​டை, ராயபுரம், திரு​வொற்​றியூர், துரைப்​பாக்​கம், சோழிங்​கநல்​லூர் உள்​ளிட்ட பகு​தி​களி​ல் மின்​தடை ஏற்​பட்​டது.

கொளத்​தூர் பகு​தி​யில் நேற்று முன்​தினம் 4 மணி நேர​மாக மின் தடை ஏற்​பட்​டுள்​ள​தாக கூறி மக்​கள் வீதி​யில் இறங்கி போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இதே​போல பல இடங்​களில் மக்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்​களாக சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இரவு நேரங்​களில் திடிரென மின்​சா​ரம் துண்​டிக்​கப்​படு​கிறது. இதனால் பொது​மக்​கள் கடும் அவதிக்​குள்​ளாகி​யுள்​ளனர்.

சென்னை தண்டையார்பேட்டையில் தொடர் மின்வெட்டை கண்டித்து மின்வாரிய ஊழியர்களை பொதுமக்கள் சிறைபிடித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

கடந்த 2 நாட்களாக மின்சாரம் இல்லாமல் அவதிப்படுவதாகவும், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் ஆவேசமாக கூறி உள்ளனர்.

இதனிடையே தமிழகத்தில் ஏற்பட்டு வரும் தொடரும் மின்வெட்டு குறித்து அதிகாரிகளுடன் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தலைமைசெயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com