எரிச்சநத்தம் பகுதியில் நாளை மின்தடை

எரிச்சநத்தம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
எரிச்சநத்தம் பகுதியில் நாளை மின்தடை
Published on

விருதுநகர் அருகே உள்ள எரிச்சநத்தம் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஆதலால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான எரிச்சநத்தம், குமிழங்குளம், நடையனேரி, கிருஷ்ணா நாயக்கன்பட்டி, அம்மாபட்டி, பாறைப்பட்டி, வடுகப்பட்டி, ஜாரி உசிலம்பட்டி, செங்குன்றாபுரம், சிலார்பட்டி, ஐ.மீனாட்சிபுரம், முருகனேரி, அக்கனாபுரம், அ.கரிசல்குளம், சல்வார்பட்டி, கோட்டையூர், கீழக்கோட்டையூர், இலந்தைகுளம், அழகாபுரி, கோவிந்தநல்லூர், ஆயர்தர்மம், சுரைக்காயபட்டி, கொண்டையம்பட்டி, சுப்புலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை விருதுநகர் மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் முரளிதரன் கூறினார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com