பாளையங்கோட்டை, மேலப்பாளையம் பகுதிகளில் நாளை மின்தடை

பாளையங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் துணை மின் நிலையங்களில் அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மின்தடை செய்யப்படும்.
பாளையங்கோட்டை, மேலப்பாளையம் பகுதிகளில் நாளை மின்தடை
Published on

இதுதொடர்பாக திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் செயற்பொறியாளர் (பொறுப்பு) ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நெல்லை மாநகரில் பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (26.4.2025) சனிக்கிழமை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும்.

பாளையங்கோட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சாந்திநகர் பீடர் செல்லும் ரஹ்மத்நகர், சாந்திநகர் முழுவதும், கிருபாநகர், டார்லிங்நகர், மேலக்குளம்ரோடு, கிரீன்சிட்டி, மேலக்குளம், மேலூர் மற்றும் காமாட்சிநகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 11 மணி வரை மின்தடை செய்யப்படும்.

மேலப்பாளையம் துணை மின் நிலையம் மற்றும் நியூ பஸ் ஸ்டாண்ட் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஹமீம்புரம், சந்தைமுக்கு, நேதாஜிரோடு, குறிச்சி, ஆசாத்ரோடு, பஜார்ஏரியா, மூத்த மீரா பள்ளி ஸ்ட்ரீட், GH, காயிதேமில்லத் காலனி, சித்திக்நகர், நேருநகர், பாத்திமாநகர் 1 மற்றும் 2, பூங்காநகர், அன்னை ஹாஜிராநகர், ஏகே கார்டன், டீச்சர்ஸ்காலனி, இன்ஜினியர்ஸ்காலனி, நேதாஜிரோடு, சிபிஎல் காலனி, முகமதுநகர், டேனிஷ்நகர், கரீம்நகர் ஒன்று இரண்டு மற்றும் மூன்று, ரோஸ்நகர், ரெட்டியார்பட்டிரோடு, பெருமாள்புரம், பொதிகைநகர், அரசு ஊழியர் குடியிருப்பு, என்.ஜி.ஓ.காலனி, மகிழ்ச்சிநகர், திருநகர், திருமால்நகர், அரசு பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com