பாணாவரம் பகுதிகளில் இன்றும், நாளையும் மின் நிறுத்தம்

பாணாவரம் பகுதிகளில் இன்றும், நாளையும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பாணாவரம் பகுதிகளில் இன்றும், நாளையும் மின் நிறுத்தம்
Published on

சோளிங்கர் கோட்டத்தை சேர்ந்த பாணாவரம் துணை மின் நிலைய, மின்பாதையில் உள்ள கம்பங்களை சென்னை- பெங்களூரு அதிவிரைவு சாலை பணியினரால் மாற்றி அமைக்க இருப்பதால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பாணாவரம், ரங்காபுரம், வெங்கடேஸ்வரா நகர் மற்றும் மாங்குப்பம் பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதேபோல, மங்களம் மின்பாதையில் உள்ள கம்பங்களை சென்னை-பெங்களூரு அதிவிரைவு சாலை பணியினால் மாற்றி அமைக்க இருப்பதால் நாளை (புதன்கிழமை) மேல்வீராணம், கோவிந்தசேரி, மங்களம் மற்றும் பொன்னப்பதாங்கல் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் உமாசந்திரா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com