சிப்காட் பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்

சிப்காட் பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தப்படுகிறது.
சிப்காட் பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்
Published on

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி தாவூது மில், ரெங்கம்மாள் சத்திரம், கே.கே.நகர், முத்துடையான் பட்டி, கிளியூர், வடசேரிப்பட்டி, வாகவாசல், புத்தாம்பூர், செம்பாட்டூர், கேடயப்பட்டி, செட்டியாபட்டி, ராயப்பட்டி, காயாம்பட்டி, மேலக்காயாம்பட்டி, வேப்பங்குடி, பள்ளத்திவயல், பாலன் நகர், பழனியப்பா நகர், அபிராமிநகர், கவிதா நகர், வசந்தபுரி நகர், பெரியார் நகர், தைலா நகர், ராம் நகர், ஜீவா நகர் சிட்கோ (தஞ்சாவூர் ரோடு), விஸ்வகர்மா நகர் ஆகிய இடங்களில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவல் மின்சார வாரிய அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com