திருவெறும்பூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

திருவெறும்பூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருவெறும்பூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
Published on

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் திருச்சி பெருநகர் கிழக்கு மன்னார்புரம் இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- திருவெறும்பூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை நவல்பட்டு, சோழமாதேவி, புதுத்தெரு, திருவெறும்பூர் தொழிற்பேட்டை, திருவெறும்பூர், டி-நகர், வேங்கூர், மலைக்கோவில், பிரகாஷ்நகர், போலீஸ் காலனி, பர்மாகாலனி, அண்ணாநகர், காவேரிநகர், சோழமாநகர், நேருநகர், கும்பக்குடி, பூலாங்குடி, பழங்கனாங்குடி, பாரத்நகர் 100 அடிரோடு, சூரியூர், காந்தலூர், குண்டூர், எம்.ஐ.இ.டி. ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com