

ரிஷிவந்தியம்,
அரியலூர் துணை மின் நிலையத்தில் நாளை(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக சின்னகொள்ளியூர், பெரியகொள்ளியூர், வடகீரனூர், மையனூர், சித்தாமூர், அத்தியந்தல், சவுரியார்பாளையம், வடமாமந்தூர், அரும்பராம்பட்டு, கடுவனூர், வடபொன்பரப்பி, அத்தியூர், அரியலூர், வாணாபுரம், பகண்டைகூட்ரோடு, ஓடியந்தல், கரையாம்பாளையம், மரூர், கடம்பூர், சீர்ப்பனந்தல், கள்ளிப்பாடி, திருவரங்கம், ஜம்படை, ஏந்தல், பெரியபகண்டை, ரெட்டியார்பாளையம், யால் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. மேற்கண்ட தகவலை சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.