நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

சேலம் மாவட்டத்தில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
Published on

இடங்கணசாலை, மகுடஞ்சாவடி

சேலம் மாவட்டம் வேம்படிதாளம் மற்றும் மல்லூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மல்லூர், பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி, பாரப்பட்டி, ஒண்டியூர், கீரனூர் வலசு, நெ.2.கொமாரபாளையம், பொன்பாரப்பட்டி, அனந்தகவுண்டம்பாளையம், பழந்தின்னிப்பட்டி, அலவாய்பட்டி, வெண்ணந்தூர், நடுப்பட்டி, நாச்சிப்பட்டி, மின்னக்கல், ஜல்லூத்துப்பட்டி, இளம்பிள்ளை, காந்திநகர், தப்பகுட்டை, சித்தர்கோவில், இடங்கணசாலை, கே.கே.நகர், வேம்படிதாளம், காக்காபாளையம், மகுடஞ்சாவடி, சீரகாபாடி, பொதியன் காடு, கோத்துப்பாலிக்காடு, அரியாம்பாளையம், மலங்காடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

அஸ்தம்பட்டி

இதேபோல் சேலம் அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் அஸ்தம்பட்டி, காந்தி ரோடு, வின்சென்ட், மரவனேரி, மணக்காடு, சின்னதிருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, புதுஏரி, ஹவுசிங்போர்டு, கொல்லப்பட்டி, கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி, ராமகிருஷ்ணா ரோடு, அழகாபுரம், ராஜாராம் நகர், சங்கர் நகர், கம்பர் தெரு, பாரதி நகர், 4 ரோடு, மிட்டா பெரியபுதூர், சாரதா காலேஜ் ரோடு, செட்டிச்சாவடி, விநாயகம்பட்டி, நகரமலை அடிவாரம், ஏற்காடு ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது என செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com