திருச்சி, மணிகண்டம் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

திருச்சி, மணிகண்டம் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருச்சி, மணிகண்டம் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
Published on

திருச்சி கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் கே.கே.நகர், இந்தியன் வங்கி காலனி, காஜாமலை காலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, கிருஷ்ணமூர்த்திநகர், சுந்தர்நகர், அய்யப்பாநகர், எல்.ஐ.சி.காலனி, பழனிநகர், முல்லைநகர், ஓலையூர், இச்சிகாமாலைப்பட்டி, மன்னார்புரம் ஒருபகுதி, சிம்கோ காலனி, ஆர்.வி.எஸ்.நகர், வயர்லஸ்சாலை, செம்பட்டு, குடித்தெரு, பாரதிநகர், காமராஜ்நகர், ஜே.கே.நகர், சந்தோஷ்நகர், ஆனந்தநகர், கே.சாத்தனூர், வடுகபட்டி, பாரிநகர், காஜாநகர், ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இதேபோல் மணிகண்டம் துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட தென்றல்நகர், முடிகண்டம், நேருஜிநகர், மலர்நகர், நாகமங்கலம், மணிகண்டம், செங்குறிச்சி, மேக்குடி, ஆலம்பட்டி, பாகனூர், தீரன்மாநகர், மாத்தூர், எசனப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும்.

இந்த தகவலை திருச்சி மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com