கண்டமனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சாரம் நிறுத்தம்

கண்டமனூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
கண்டமனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சாரம் நிறுத்தம்
Published on

கண்டமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி கண்டமனூர், அம்பாசமுத்திரம், ஸ்ரீரெங்கபுரம், தப்புக்குண்டு, கோவிந்தநகரம், வெங்கடாசலபுரம், எம்.சுப்புலாபுரம், ஜி.உசிலம்பட்டி, சித்தார்பட்டி, கணேசபுரம், ஜி.ராமலிங்கபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை தேனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com