திருவாடானையில் நாளை மின்தடை

திருவாடானையில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
திருவாடானையில் நாளை மின்தடை
Published on

தொண்டி, 

திருவாடானை, நகரிகாத்தான் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பாண்டுகுடி, நகரிகாத்தான், சி.கே.மங்களம், வெள்ளையபுரம், ஆண்டாவூரணி, மங்கலக்குடி, என்.மங்கலம், கட்டிவயல், பெருவாக்கோட்டை, அஞ்சுகோட்டை, ஓரிக்கோட்டை, கருமொழி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இந்த தகவலை திருவாடானை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com