கோவில்களில் பிரதோஷ பூஜை

பெரியகுளம் பகுதியில் உள்ள கோவில்களில் பிரதோஷ பூஜ நடந்தது.
கோவில்களில் பிரதோஷ பூஜை
Published on

பெரியகுளம் அருகே கைலாசப்பட்டி பகுதியில் உள்ள கைலாசநாதர் மலைக் கோவிலில் தை மாத பிரதோஷ பூஜை நடைபெற்றது. இதனையொட்டி நந்திகேஷ்வரர், கைலாசநாதருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதேபோல் பெரியகுளம் அருகே ஈச்சமலை பகுதியில் உள்ள மகாலட்சுமி கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி நந்திகேஸ்வரருக்கு 48 பிரதோஷங்களில் வைக்கப்பட்டிருந்த ருத்ராட்சங்கள், பால், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திருமஞ்சனப் பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com