பெரிய கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு

பெரிய கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.
பெரிய கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
Published on

தஞ்சை பெரிய கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது உலக பாரம்பரிய சின்னமாக விளங்குவதோடு, தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் தஞ்சை பெரியகோவிலில் நேற்று சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. அப்போது நந்தியெம்பெருமானுக்கு பால், மஞ்சள் அபிஷேகம் நடந்ததையும், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com