தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை

வந்தவாசியில் தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
Published on

வந்தவாசி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த மருத்துவம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி. இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 31). செய்யாறு சிப்காட்டில் உள்ள காலணிகள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

வந்தவாசி ஏ.கே.எஸ். வசந்தம் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். கடந்த சில மாதங்களாக இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்த இவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து அவரது தம்பி பாரதகண்ணன் அளித்த புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com