திருவாலங்காடு அருகே தனியார் தொழிற்சாலை வேன் கவிழ்ந்து விபத்து - 14 பெண்கள் படுகாயம்

திருவாலங்காடு அருகே தனியார் தொழிற்சாலை வேன் கவிழ்ந்த விபத்தில் 14 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
திருவாலங்காடு அருகே தனியார் தொழிற்சாலை வேன் கவிழ்ந்து விபத்து - 14 பெண்கள் படுகாயம்
Published on

திருத்தணி,

திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அடுத்த விஸ்வநாதபுரத்தில் பேனா தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் திருவாலங்காடு பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் தினமும் வேலைக்கு தொழிற்சாலையின் வேனில் சென்று வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை இக்கம்பெனியில் பணிபுரியும் திருவாலங்காடு சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த 14 பெண்கள் வேனில் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தனர். வேன் பாகசாலை சிறுபாலம் அருகே சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே உள்ள விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் இருந்த 14 பெண்கள் காயமடைந்தனர். டிரைவர் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். காயமடைந்த பெண்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் பேரம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து திருவாலங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com