செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 20-ந்தேதி நடக்கிறது.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
Published on

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

படித்த வேலை வாய்ப்பற்ற வாலிபர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 20-07-2023 (வியாழக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை நேர்முகத் தேர்வு நடத்தி தேர்ந்தெடுப்பர். வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ்-2, பட்டப்படிப்பு பி.இ., ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர், ஆய்வக உதவியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை ஆகும். விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் காலை 10 மணி முதல் 2 மணி வரை வெண்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com