திருவண்ணாமலையில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

திருவண்ணாமலையில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
திருவண்ணாமலையில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
Published on

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டு மையம் ஆகியவை இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நாளை (வெள்ளிக்கிழமை) நடத்துகிறது. தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் இந்த வேலை வாய்ப்பு முகாம் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டு மைய வளாகத்தில் நடக்கிறது.

இந்த முகாமில் 15-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 250-க்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, பொறியியல், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்ற வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். விருப்பம் உள்ளவர்கள் 4 புகைப்படம், ரேஷன் அட்டை, சாதிச்சான்று, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் முகாமில் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேவைய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கெண்டு விவரங்களை பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com