சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கு பரிசு தொகை

சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கு கலெக்டர் முருகேஷ் பரிசு வழங்கினார்.
சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கு பரிசு தொகை
Published on

தமிழகத்தில் ஆண்டு தோறும் காமராஜர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் சிறந்த அரசு பள்ளிகளை தேர்வு செய்து பரிசளிக்கப்பட்டு வருகிறது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2022-23-ம் கல்வி ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட 4 அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி தேர்வு செய்யப்பட்ட திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1 லட்சம், செய்யாறு ஒன்றியம் திருவத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.75 ஆயிரம், செய்யாறு ஒன்றியம் சிறுவேளியநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ.50 ஆயிரம், புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் என பரிசுதொகையினை காசோலையாக சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.

அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உடனிருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com