நீளும் ரஷியா-உக்ரைன் போர்: தங்கம் விலை ரூ.352 அதிகரித்தது

நீளும் ரஷியா-உக்ரைன் போர்: தங்கம் விலை ரூ.352 அதிகரித்தது ஒரு பவுன் ரூ.38,256-க்கு விற்பனை.
நீளும் ரஷியா-உக்ரைன் போர்: தங்கம் விலை ரூ.352 அதிகரித்தது
Published on

சென்னை,

சென்னையில் நேற்று முன்தினம் கிராம் ரூ.4,738-க்கும், பவுன் ரூ.37,904-க்கும் தங்கம் விற்பனை ஆனது. இந்த நிலையில் தங்கம் விலை நேற்று அதிகரித்தது. அதன்படி முந்தைய தினத்தை விட கிராமுக்கு ரூ.44 உயர்ந்து ரூ.4,782-க்கும், பவுனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.38,256-க்கும் தங்கம் நேற்று விற்பனை ஆனது.

தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் உயர்ந்தது. அதன்படி முந்தைய தினத்தை காட்டிலும் கிராமுக்கு 90 பைசா உயர்ந்து ரூ.69.90-க்கும், கிலோவுக்கு ரூ.900 உயர்ந்து ரூ.69,900-க்கும் வெள்ளி நேற்று விற்பனை ஆனது.

ரஷியா-உக்ரைன் போர் உச்சம் அடைந்து வரும் நிலையில் பங்குச்சந்தை மீண்டும் சரிவில் பயணிக்கிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது மீண்டும் முதலீடு செய்ய தொடங்கியதால் தங்கம் விலை உயர தொடங்கியுள்ளது என வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com