கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Published on

ஊழியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியும், துணைப்பதிவாளர் பதவி உயர்வுப் பட்டியலில் குளறுபடிகளை தன்னிச்சையாக ஏற்படுத்தி வரும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரைக் கண்டித்து புதுக்கோட்டையில் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டுறவு சங்கங்களின் புதுக்கோட்டை மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வினிதா வரவேற்றார். கோரிக்கைகளை விளக்கி பூங்காவனம் பேசினார். முடிவில் சுந்தரராசு நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com