வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

ஆலங்குடியில் வக்கீல் சங்கம் சார்பில், நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் சங்க தலைவர் ராஜா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின் சட்டப்பிரிவுகளை வடமொழி தலைப்புகள் பெயரில் மத்திய அரசு மாற்றியமைத்து உள்ளது. இந்த 3 சட்டங்களையும் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மசோதாக்கள் இந்திய அரசியலமைப்பு சட்டம் 348-க்கு எதிரானது. இந்த 3 சட்டத்தையும் முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி ஜெ.ஏ.சி.சி. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 3 சட்டங்களையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து உடனடியாக நீக்க வலி யுறுத்தியும், சட்டங்களை மத்திய அரசு மீண்டும் நிறைவேற்றினால் வக்கீல்கள் மூலம் நாடு முழுவதும் மாபெரும் போராட்டங்கள் நடத்தப்படும். வக்கீல்கள் தினந்தோறும கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட செய்வோம் என்று கோஷமிட்டனர். இதில் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com