

மணப்பாறை:
பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் நேற்று முன்தினம் மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு பகுதியில் உள்ள பால் கூட்டுறவு சங்கம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் திரண்டு, பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வலியுறுத்தி பாலை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர்.