10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 19ல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள்

விடைத்தாள் நகலைப் பெற பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்கலாம்
10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 19ல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள்
Published on

சென்னை,

தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில், 10ம் வகுப்பில் 93.80 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்தனர். அதேபோல், 11ம் வகுப்பில் 92.09 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில் 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் மே 19-ல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது

விடைத்தாள் நகலைப் பெற பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்கலாம்.தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in இணையத்தில் மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம்; ரூ.275 கட்டணமாக செலுத்தி விடைத்தாளின் நகல்களை பெறலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com