‘பி.எஸ்.எல்.வி. சி-61, சி-62 திட்டங்களை தோல்விகளாக கருதவில்லை’ - இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்

தோல்விகளை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளாக கருதுகிறோம் என வி.நாராயணன் தெரிவித்துள்ளார்.
‘பி.எஸ்.எல்.வி. சி-61, சி-62 திட்டங்களை தோல்விகளாக கருதவில்லை’ - இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்
Published on

சென்னை,

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் கடந்த ஆண்டு மே 18-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. ஆனால், விண்ணில் பாய்ந்த சில நிமிடங்களில் பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் தோல்வியடைந்தது.

அதேபோல், கடந்த ஜனவரியில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட்டில் இ.ஓ.எஸ்.-என்-1 செயற்கைகோள் பொருத்தப்பட்டிருந்தது. இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட பிறகு 3-ம் கட்டத்தின் இறுதியில் ஏற்பட்ட ஒரு முரண்பாட்டால் திட்டம் வெற்றியடையாமல் போனது.

இந்த நிலையில், பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் தோல்வி குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன் கூறுகையில், “பி.எஸ்.எல்.வி. சி-61 மற்றும் சி-62 திட்டங்களை தோல்விகளாகக் கருதவில்லை. மாறாக கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளாகவே அவற்றை கருதுகிறோம்.

எப்போதெல்லாம் ஒரு பின்னடைவு ஏற்படுகிறதோ, அதை நாங்கள் ஒரு தோல்வியாகக் கருதுவதில்லை. மாறாக அதைக் கற்றுக்கொள்வதற்கும் நமது அமைப்பை வலுப்படுத்துவதற்குமான ஒரு வாய்ப்பாகவே கருதுகிறோம்' என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com