தீண்டாமை சுவரை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா

தீண்டாமை சுவரை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்
தீண்டாமை சுவரை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா
Published on

சேலம்

தீண்டாமை சுவரை அகற்றக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீண்டாமை சுவர்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென நுழைவுவாயில் அருகே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலெக்டரிடம் மனு கொடுக்க அனுப்பினர். முன்னதாக இதுகுறித்து அவர்கள் கூறும் போது, தாசநாயக்கன்பட்டி அருந்ததியர் காலனியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரசு வழங்கிய நிலத்தில் வசித்து வருகின்றனர். அந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டி வருகிறார்கள். எனவே இந்த தீண்டாமை சுவரை அகற்ற உரிய விசாரணை நடத்த வேண்டும்.

வீட்டுமனை

மேட்டூர் அருகே உள்ள நரியனூர் காலனியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் நுழைவு வாயில் அருகே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தைநடத்தினர்.

அப்போது அவர்கள் கூறும் போது, எங்களுக்கு வழங்கப்பட்ட சிறிய வீடுகளில் வசித்து வருகிறோம். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டதால் ஒரே வீட்டில் தற்போது வசிக்க முடியவில்லை. எனவே பள்ளிப்பட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com