போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

நெல்லையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
Published on

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காலையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணை கமிஷனர்கள் சரவணகுமார் (மேற்கு), அனிதா (தலைமையிடம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கலந்துகொண்ட பொதுமக்கள் தங்கள் கோரிக்கை குறித்து மனுக்கள் கொடுத்தனர். அதனை பெற்றுக்கொண்ட போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன். உரிய நடவடிக்கை எடுக்கக்கூறி சம்பந்தப்பட்ட போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் மற்ற நாட்களிலும் பொதுமக்கள் புகார் மனுக்கள் கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. முகாமில் பண மோசடி, நில மோசடி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து மனுக்கள் கொடுக்கப்பட்டன.

அதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமை தாங்கினார். கூடுதல் சூப்பிரண்டு ராஜூ, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பர்னபாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. சுமார் 50 மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com